Saturday 7 June 2014

கைக்குக் கைமாறும் பணமே - 02

ஈரேழு தீவைக் கொண்டதாலே
'ஈழம்' என்றனர் என்றேன்
பாணன் யாழ் பாடி
பரிசாகப் பெற்ற இடமாம்
யாழ்ப்பாணம் என்றேன் - அந்த
யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே
எட்டுத் தீவுகள் சொந்தமாமே!

இந்திய-தமிழகமருகே
நடுக்கடலை அண்டியே கச்சதீவாம்
யாழ் கோட்டையைக் கடந்தே
பண்ணைக்கடலும் மண்டதீவுமாம்
தூரத்தே நெடுந்தீவும் நயினாதீவுமாம்
அடுத்து அனலதீவும் எழுவைதீவுமாம்
ஆங்கே பருத்தித்தீவொடு புங்குடுதீவுமாம்
பைங்கிளி என்பாளின்
கடற்கரையூரைச் சுற்றிய தீவுகளாம்!

பைங்கிளியின் வீட்டார்
பிள்ளையாரைக் குப்பிட்டாலும்
இந்துக்கள் ஆனாலும் மீன்பிடித்தே
கடலன்னை போட்ட பிச்சையிலே
வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்ல
பைங்கிளியும் அகவைக்கு வந்தாலும்
மருத்துவராகப் படித்து உயர்ந்தாளே!

பைங்கிளியின் வீட்டுக்குப் பின்னே
ஆங்காங்கே பனைகள் காற்றுக்கு ஆட
அப்பாலே துள்ளிக் குதித்து ஓடி வந்த
அலைகள் வந்து மோதும் கரையாம்
இடத்தாலே கெவி மாதா கோவிலாம்
வலத்தால ஐங்கரன் கோவிலாம்
அண்டையிலே அன்னம்மா வீடும்
அயலுக்க பெருமாள் வீடும்
வீட்டு வாசல் முன்னே
பேரூந்து ஓடும் பெரும் வழியாம்!

கந்தப்புவும் செல்லாச்சியும்
அப்பனும் ஆத்தாளுமாக
பொன்னனும் வேலனும்
பைங்கிளிக்கு அண்ணன்மாராக
பைங்கிளிக்கு வலை போட்ட பொடியள்
அவளின்ர அண்ணன்மாரிட்ட உதைபட
கற்பைப் பேணி மிடுக்காக மின்னும்
பைங்கிளியின் எடுப்புக்கு நிகராக
கடற்கரையூரில் எவளுமில்லையே!
--தொடரும்--


2 comments:

  1. பைங்கிளி மருத்துவராகப் படித்து விட்டு...?

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.