Monday 16 June 2014
நேர்காணல் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு!
இலக்கியத்தில் கவிதை, கதை எனத் தனித்து எழுதுவோரும் பல துறைகளில் எழுதுவோரும் உள்ளனர். ஊடகங்களில் அவர்களை நேர்காணல் பகுதிக்கு அழைத்து கேள்வி மேல் கேள்வியால் துளைத்து அறிவைப் பிடுங்கிப் பரப்புவார்கள். இதனால் படைப்பாளி கூறும் நுட்பங்களை நாம் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. நம்மாளுகள் இவ்வுண்மையை அறியாமல் நேர்காணல் பகுதியைப் படிக்க நாடுவதில்லை. அப்படியானவர்கள் "அவரவர் தன் (சுய) அறிமுகமாக இருக்குமெனப் படிப்பதில்லை." என்பர்.
நேர்காணல் பகுதியில் "தங்களைப் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?" என்ற கேள்வியைத் தான் எல்லோரும் கேட்பர். அதில் தவறில்லையே. அடுத்து "எவ்வாறு எழுத்துத்துறையில் காலடி வைத்தீர்கள்?" என்று கேட்பார்கள். அதிலும் தவறில்லையே. இதற்காகவே ஒரு படைப்பாளி தன் (சுய) அறிமுகத்தைத் தருகின்றார். நேர்காணலை மேற்கொள்பவர் வாசகர் படைப்பாளியை அடையாளம் காணவே இவ்வாறு கேட்க முனைகின்றார்.
படைப்பாளிகளில் இருபாலரும் உள்ளனர். ஆண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். பெண்பாலர் சிலர் தம்பக்கம் சார்பாக எழுதுவர். சிலர் இருபாலார் சார்பாகவும் எழுதுவர். வாசகர் விருப்பறிந்து எழுதுவோரே வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றி பெற்ற படைப்பாளி ஒருவருடனான நேர்காணல் ஒன்றை 4பெண்கள் தளத்தில் படிக்க முடிந்தது. "இலக்கிய பரப்பில் சுதந்திரமாக இயங்க முடிவதில்லை: ஜெயந்தி சங்கர் நேர்காணல்" என்ற தலைப்பில் வெளியான பதிவை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.
http://wp.me/p2IA60-1y5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.