Tuesday 16 June 2015

அறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்

வாசிப்பவரை வாசகர் என்கிறோம். வாசகர் ஏன் வாசிக்க வருகிறார்கள்? அறிவு பசி போக்கவா? அறிவுத் தேடலுக்கு விருந்து கிடைக்குமென்றா? வாசிப்பதனால் உள/மன நிறைவு கிட்டுவதாலும் அல்லது வாசிப்பதனால் களிப்ப(மகிழ்ச்சிய)டைவதனாலும் வாசகர் வாசிப்பை விரும்புகின்றனர். வாசகர் உள்ளம் (மனம்) அறிந்து எழுதிய படைப்பாளிகளே வெற்றி பெற்றவராயினர்.

நாம் ஏன் எழுதுகிறோம்? எழுதுவதால் நாமும் களிப்ப(மகிழ்ச்சிய)டைகின்றோம். ஆயினும், எமது எழுத்து அதிக வாசகர் கண்ணில் பட்டு சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெறும் வேளை தான் உள்ளம் (மனம்) நிறைவடைகின்றது. சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெற வாசகர் களிப்ப(மகிழ்ச்சிய)டைய வேண்டுமென்பதை மறந்துவிடலாகாது. அதாவது, வாசகர் எதிர்பார்ப்பு எமது எழுத்தில் இருக்க வேண்டுமே!

வாசிப்பவரைப் படிக்காதவர் என எண்ணி எழுதுகோல் ஏந்திய சிலர் கண்டபடி கிறுக்கித் தள்ளி வாசகரிடம் சொல்லடி வேண்டிக்கட்டிய நிகழ்வுகளுக்குப் பல ஊடகங்கள் சாட்சி. எனவே, ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் போது எம்மை விட வாசகர் அதிகம் படித்திருப்பார் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு நிலையைக் கடுகளவேனும் எடுத்துச் சொல்ல இங்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இனி வாசகருக்கும் படைப்பாளிக்கும் உதவும் வகையில் "தமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்" என்ற தலைப்பில் "தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்"  என்ற துணைத் தலைப்பில் பேணப்படும் தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

இத்தளம் வாசகரின் அறிவுத் தேடலுக்கும் / அறிவு பசிக்கும் உதவும் என நம்புகின்றேன். அதேவேளை சிறந்த படைப்பாளிகள் தங்கள் தளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதில் எனது பணி என்னவென்றால், எனது பத்துப் பன்னிரண்டு தளங்களூடாக இத்தளத்தை அறிமுகம் செய்து வைப்பதாகும். எல்லோருக்கும் பயன்தரும் http://tamilsites.doomby.com/ என்ற தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

Tuesday 2 June 2015

ஊடகங்களில் தமிழைக் கையாளுவது எப்படி?

ஆங்கிலம் சேர்க்காத பதிவு என்றால்
வாசகர்/பதிவர் படிக்க மாட்டினம் என்ற
எண்ணம் சிலருக்கு இருக்கலாம்...
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
ஆங்கிலம் சேர்க்காத தலைப்பு இருப்பின்
வாசகர்/கேட்போர் உள்ளத்தில் எடுபடாது என்ற
எண்ணம் பலருக்கு இருக்கலாம்...
வரிவிலக்கைப் பெறுவதற்காய்
தமிழில் தலைப்பை இட்டாலும் கூட
தமிழ்த் திரைப்பட ஊடகத்தின் உள்ளே
பலமொழி கலந்த குழையல் மொழியே
வாசகர்/பார்ப்போர் உள்வாங்கும் நிலை!
ஊடகங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும்
தமிழைக் கொல்லும் ஊடகங்கள் தான்
எங்கள் கண்களில் முன்னே நிற்பதை
நான் காண்கின்றேன் - அதனால் தான்
"தமிழ் மின்னூடகங்களும்
அச்சு ஊடகங்களும்: இன்றைய
நிலையும் அறைகூவல்களும்" என்ற
பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்! - அதனை
ஆக்கிய அறிஞர் ரெ.கார்த்திகேசு, Ph.D. அவர்கள்
முன்னுரை தொட்டு முடிவுரை வரை
ஆழ, அகல, உயரம் பார்த்து
அக்கு வேறு ஆணி வேறாக
நன்றாக அலசி இருப்பதைப் பாரும்! - அதற்கு
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்!
http://reka.anjal.net/?p=96