Showing posts with label எமது செய்திகள். Show all posts
Showing posts with label எமது செய்திகள். Show all posts

Thursday, 27 August 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 01

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Saturday, 1 August 2015

புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!


அன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;

ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.

என்னடா மோனே! அடி பிள்ளோய்!
உவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்
ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைக்கிறானாம்
ஈற்றில எல்லாவற்றையும் அழிச்சுப்போட்டு
கண்ணீர் வடிப்பான் போல கிடக்கே!
என்றாலும்
எங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது
யாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்!
மதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

எனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Tuesday, 14 April 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, 22 March 2015

நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!

என் நிறம், மணம், குணம் ஏதுமறியாது
எனது அடி, நுனி, அத்தனையும் அறியாது
2010 இலிருந்து
தமிழ்நண்பர்கள்.கொம் இலிருந்து
என்னுடைய எழுத்தில்
என்னை அடையாளம் கண்டு
என்னையும் ஒரு பதிவராகக் கணக்கிலெடுத்து
உறவைப் பேணி வரும்
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
எங்கிருந்தோ என் பதிவை நாடி - தங்கள்
எண்ணங்களைக் கருத்து வண்ணங்களாக
பின்னூட்டமிட்டும் - எனது
பதிவுகளைப் பகிர்ந்தும் - எனது
தளங்களை அறிமுகம் செய்தும்
சின்னப்பொடியன் (யாழ்பாவாணன்) என்னை
வலைப்பதிவராக (Blogger) உயர்த்திய
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
உங்கள் ஒத்துழைப்பும் வழிகாட்டலும்
என்னை வளப்படுத்தி, நெறிப்படுத்தி
எனது திறமைகள் எல்லாவற்றையும்
ஏழாம் எண் ஆளென - தமிழில்
ஏழு வலைத் தளங்களூடாக
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
வெளியிடப் பின்னூட்டியாக (Feedback) இருந்து
என்னை ஆளுமை செய்கிறது என்பதை
நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
ஆகிய வலைத் தளங்களின்
வடிவமைப்பை நிறைவு செய்யும் நோக்கில்
அடிக்கடி தங்கள் பதிவை நாடி
என் கருத்துகளை பின்னூட்டமிட முடியாமை
எனக்குத் துயரம் தான்...
ஆயினும் - தங்கள்
வலைப்பூக்களை - தங்கள்
பதிவுகளை நாடி வருவேன்!
நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!


Thursday, 15 January 2015

தை பிறந்தாச்சு வெளியீடுகள் என்னவாச்சு

உலகத்தார் தமிழ் கற்று
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வலைத்தளம்,
வலைப்பூ, கருத்துக்களம் என
இணையம் வழியே தமிழ் பரப்பும்
மதிப்புக்குரிய
படைப்பாளிகள், வாசகர் எல்லோருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தை பிறந்தாச்சு - இனி
வெளியீடுகள் என்னவாச்சு என்பீர்...
எம்மைப் போல
எல்லோரும் இனிதே வாழ
எம் உள்ளத்து வெளியீடுகளை
எல்லோருக்கும் பகிருவோம்!

Tuesday, 21 October 2014

தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!


வலை வழியே
எழுத்தாலே அறிமுகமாகி
ஆளுக்காள் மதியுரை கூறி
ஆளுக்காள் தோள்கொடுத்து
உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன்
தீபாவளி வாழ்த்துப் பகிருவோம்!
மஞ்சள் அரைத்துத் தொட்ட
கோடி (புத்தாடை) உடுத்துக் கோவில் போய் வந்து
அம்மா சுட்ட மஞ்சள் தோசை உண்டு
உறவுகளைப் பேணுவது வீட்டிலே!
ஆளுக்காள் நடாத்தும்
வலைப்பூக்களில் கருத்துக் கூறி
உறவுகளைப் பேணுவது போல
தீபாவளி வாழ்த்துப் பகிர்ந்து
தமிழ் பண்பாட்டைப் பேணுவோம்
வாருங்கள் வலை உறவுகளே!

Thursday, 16 October 2014

மதியுரை (ஆலோசனை) தாருங்கள்!


மதிப்பிற்குரிய வலைப்பதிவர்களே!

வலைப்பதிவர்களின் சிறந்த தளங்களைத் திரட்டிப் பேணுவதோடு நின்றுவிடாமல் தமிழ் மொழி ஆய்வுப் (ஆராய்ச்சிப்) பதிவுகளையும் திரட்டிப் பேணுவதே எனது நோக்கமாகும். இவற்றை எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் தளத்தில் ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யவும் எண்ணியுள்ளேன். மேலும், தேடுபொறிகளூடாகத் தேடும் வேளை நிரல் (List) படுத்தவும் ஒழுங்கு செய்கின்றேன். அதனால், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஓர் எள்ளு அளவேனும் முயற்சி எடுத்ததாக நான் நம்புகிறேன்!

இதனை நிறைவேற்றவே http://2tamil.tk/ என்ற தளத்தை வடிவமைக்கிறேன். இதன் ஒரு பகுதியாகவே http://2tamil.tk/ts4u இருக்கும். மேற்படி இரு இணைப்புகளையும் சொடுக்கிப் படித்த பின், எனது முயற்சிகளை மேம்படுத்த உதவும் மதியுரை (ஆலோசனை) தாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்


Wednesday, 17 September 2014

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்

இன்றைய நுட்பங்களில் வலைப்பூக்கள் சிறந்த ஊடகங்களாக மின்னுகின்றன. சிறந்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்கள் பலரது கைவண்ணங்களாலும் நாவண்ணங்களாலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. அது பலரைத் தமிழ்மணம் பேண ஊக்கமளிக்கிறது. அந்த வகையில் அடுத்தொரு முயற்சியாக வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள் பகிரப்படுவதனைக்  கருத்திற்கொள்ளலாம். இம்முயற்சி மேலும் வலைப்பதிவர்களின் செயற்றிறனைப் பெருக்கிக்கொள்ளப் பின்னூட்டியாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

இம்முயற்சியைத் தொடக்கிவைத்தவர்களுக்குக் காலில் வீழ்ந்து வணங்கி யாழ்பாவாணன் வெளியீட்டகம் நன்றி தெரிவிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளுக்கு யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும். உலகெங்கும் தமிழைப் பேண வலைப்பதிவர்களின் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கிறது. எனவே, வலைப்பதிவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு நாமும் மதிப்பளிப்பதையே விரும்புகின்றோம்.

உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் தம்பி ரூபன் அவர்களுக்குக் கீழ்வரும் அறிஞர்கள் விருது வழங்கி மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

அறிஞர் விஜயா அம்மா அவர்கள்

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

இவ்வாறு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணும் வலைப்பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேருக்கும் யாழ்பாவாணன் வெளியீட்டகம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

தம்பி ரூபன் அவர்கள் உங்கள் யாழ்பாவாணனுக்கும் தனது விருதுகளைப் பகிர்ந்துள்ளார். அவை பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும்  வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

Friday, 5 September 2014

தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு


தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்தும்
பல நண்பர்களைப் பங்கெடுக்கச் செய்தும் உதவிய
எல்லோருக்கும் ரூபன் குழுவினர் சார்பில்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டி
முடிவு நாளை கொஞ்சம் நீடித்தால்
மேலும், பல உறவுகளை இணைக்க
வழிபிறக்கும் என்ற கருத்தை ஏற்று
இந்திய நேரப்படி 15/09/2014 நள்ளிரவு 12 மணி வரை
போட்டி முடிவு நாள் நீடிக்கப்படுகிறது!
மேலதிகத் தகவலைப் பெற:
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014_09_01_archive.html

தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்காதோர் பங்கெடுக்க வாருங்கள்...
இதுவரை பங்கெடுக்காத நண்பர்களைக் கூட
பங்கெடுக்கச் செய்து உதவலாம் வாருங்கள்...
உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் - மேலும்
பல போட்டிகளை நடாத்த ஊக்கம் தருமே!

Thursday, 28 August 2014

தீபாவளிக் கவிதைப் போட்டியின் முடிவுகள் வரும்போது...

தீபாவளிக் கவிதைப் போட்டி அறிவிப்பை
01/08/2014 இல் பதிவர் ரூபன் பதிவுசெய்தார்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html
உலகெங்கும் 12000 இற்கு மேல்
பதிவர்கள் இருக்கின்ற செய்தி அறிந்தேன்
அவர்கள் அத்தனை பேரும் போட்டியில்
பங்கெடுப்பார்கள் என நம்பியே
எனது எண்ணங்களை இப்படிப் பகிர்ந்தேன்...
01/08/2014 இல்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
03/08/2014 இல்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
08/08/2014 இல்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
23/08/2014 இல்
பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post_23.html
போட்டியின் முடிவு நாள் - அது
இந்திய நேரப்படி 01/09/2014 இரவு 12 மணி
இறுதி நேரம் வரை காத்திருக்காமல்
பதிவுகளை முன்கூட்டியே அனுப்பியோர்
போட்டியின் முடிவுகள் எப்படி இருக்குமென
எண்ணிப் பார்க்கையிலே
எத்தனை ஆயிரம் பேர்
போட்டியில் பங்கெடுத்தார்களென
நடுவர்கள் தெரிவிக்க இருப்பதை
நானும் அறியக் காத்திருக்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டியின்
முடிவுகள் வரும் போது - நானும்
நகைச்சுவைப் பதிவர்களை வெளிக்கொணர
ஐந்தடிக் குறும்பா (லிமரிக்) உடன்
நான்கடி உரையாடல் (ஸ்கிரிப்) நகைச்சுவை
இல்லாவிட்டால் பாரும்
சிறுகதைப் பதிவர்களை வெளிக்கொணர
75-100 சொல்களைக் கொண்ட கடுகுக்கதை
தைப்பொங்கல் நாள் போட்டி நடத்த
எல்லோரையும் தயார்ப்படுத்த எண்ணியிருக்கேன்!
ஆனால், அதற்கு முன்
நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லி
முடிவு நாளுக்கு முன்னதாகவே
பல்லாயிரம் பதிவர்களை அழைத்து
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்கச் சொல்லிவிடுங்கோ!
போட்டிகள் யாவும்
வலைப்பூக்களில் தமிழைப் பேணவும்
உலகெங்கும்
தமிழை வாழ வைக்கவுமே!

Wednesday, 20 August 2014

எழுது எழுது எழுது

எண்ணியதெல்லாம் எழுது - அது
எந்த இலக்கியம் என்று கேளாமலே...
அட, இலக்கியம் என்றால்
என்ன என்று கேட்கிறீரோ...
வாழ்ந்த, வாழும்
நம்மாளுகளின் வாழ்வை
படம் பிடித்துக் காட்டுவதே
இலக்கியம் என்கிறார்களே...
எழுது எழுது எழுது
எழுதப் புகுந்தால்
வாசிப்பது, எவர் என்று கேட்கிறீரோ...
அடடே, உன் எழுத்தால்
வாசிப்பவர் உள்ளத்தை
மகிழ்வடையச் செய்வாய் எனின்
மகிழ்வடைவதற்காக வாசிக்கும்
எல்லோரும்
உன் எழுத்தை வாசிப்பார்களே...
எழுதிய பதிவை
எவர் வெளியிட வருவாரா...
உனது சொந்தப் பதிவாயின்
எல்லோரும் உதவுவார்களே...
எழுதத் தூண்டுபவை
எவை என்று கேட்கிறீரோ...
மக்கள் வாழ்க்கையை படி
பழைய, புதிய
இலக்கியவாதிகளின் நூலைப் படி
நல்ல திரைப்படத்தைப் பார்
இதற்கு மேலும் - உன்
தேடலைப் பெருக்கினால் போதாதா?
எழுதுவதால் மகிழ்வடையப் பார்
உன் எழுத்தைப் பார்த்து
மகிழ்வோரின் விருப்பறிந்து எழுது...
உன் உள்ளத்தில் எழும்
நல்லெண்ணங்களையோ
படித்தறிவையோ
பட்டறிவையோ
மதியுரையையோ
வழிகாட்டலையோ
நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க
எழுத்தாசிரியர் ஆகலாமே!
எண்ணியதெல்லாம் எழுது
அதனால்
நாட்டு மக்கள் - தங்கள்
அறிவைப் பெருக்குவார்களே!

Sunday, 20 July 2014

யாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க!

என்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது வெளியீடுகளே என்னைப் பற்றிச் சொல்வதை விரும்புகிறேன். "கற்றது கைப்பிடி மண்ணளவு கற்காதவை உலகளவு" எனப் பெரியோர் வழிகாட்டுவர். ஆயினும், நான் கற்றது சிறிதாக முளைத்த சின்னிவிரல் நகத்தளவு என்பேன். நான் கற்காதவை உலகளவு இருக்கும் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். ஆயினும், எனது இணையவழி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்பியதால் இப்பதிவை எழுதுகிறேன்.

1987 இலிருந்து எழுதுகிறேன். ஈழத்து ஏடுகளான வீரகேசரி வாரமலர், ஈழநாதம், அறிவுக்கதிர் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளியாகின. அரங்குகளிலும் நான் கவிதை பாடினேன். ஈழத்துப் போர்ச் சூழலால் பல நூறு படைப்புகள் அழிந்து போயின. ஆயினும், 2010 இலிருந்து வலைப்பக்கம் ஊடாக எனது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தேன். இன்று இயலக்கூடிய அளவு எனது முயற்சிகளை ஒழுங்குபடுத்தி முடித்திருக்கிறேன். ஆனால் இவை முடிவல்லத் தொடக்கமே! இவற்றைத் தொடர்ந்து பேணுவதால் என்னால் இயலக்கூடிய எல்லாப் பணிகளையும் வழங்க முடியுமென நம்புகிறேன்.

இன்றும் நான் இலங்கைப் படைகளின் கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதால் அரசியல் நிலைமைகளை எழுத முடியாதிருக்கிறேன். ஆயினும், எனது ஏனைய முயற்சிகளைத் தொடருகிறேன். உளநலம், நற்றமிழ், பாபுனைதல், எழுத்துகள், வெளியீடுகள் ஆகிய ஐந்து இலக்குக் குறித்துத் தமிழில் ஐந்து வலைப்பூ நடாத்துகிறேன். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் போதிய அறிவின்மை இருந்தும் எனது கிறுக்கல்களை வெளியிட இரண்டு வலைப்பூ நடாத்துகிறேன்.

இவற்றிலிருந்து பிந்திய ஐந்து பதிவுகளைத் (http://feed2js.org/ தள உதவியுடன்) திரட்டித் தொகுத்திருக்கிறேன். நேரமுள்ள வேளை விரும்பியோர் வருகை தந்து பார்வையிட முடியும். மேலும், நானோ அறிவிற் சிறியன்; பெருமையாகச் சின்னப்பொடியன் என்று சொல்லியவாறு இருக்க முடியாதே! ஆகையால், நான் படிக்கத் தேடிப் பதிவிறக்கிய மின்நூல்களையும் பிறருக்குப் படிக்க உதவும் மின்நூல்களையும் மின்சேமிப்பகங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளேன். அவற்றைப் பதிவிறக்க உதவும் முகவரிகளைத் (URL) தொகுத்திருக்கிறேன்.

இன்று ஆயிரத்திற்குச் சற்றுக் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இலட்சக் கணக்கான மின்நூல்களைத் திரட்டித் தொகுக்கவுள்ளேன். 1995 இல் கணினி படித்துப் பின் விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் இருந்தாலும் தற்போது நிறுவனமொன்றின் முகாமையாளராகவுள்ளேன். அதற்காகக் கணினிக் கல்வியைக் கைவிடலாமா? அதற்கும் யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தைப் பேணுகிறேன். அதனூடாகத் தமிழ் மென்பொருள்கள் வெளியிடவுள்ளேன்.

இவ்வாறான வெளியீடுகளின் திரட்டியாக "யாழ்பாவாணனின் இணையவழிப் பணிகள் (Yarlpavanan's Network Duties)" என்ற தளத்தை ஆக்கியுள்ளேன். இதுவரை ஒழுங்குபடுத்திய எல்லா முயற்சிகளும் இனிச் செயற்படவுள்ளது. அதன் அறுவடைகளை இத்தளத்தில் பதிவுசெய்யவுள்ளேன். இத்தளத்தை எனது வலைப்பூக்களில் இணைத்துமுள்ளேன். இங்கு வருகை தருவதன் மூலம் பிந்திய பதிவுகள், பிந்திய தகவல் என்பன அறிய முடியும். அதற்குக் கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பாருங்கள்.


Wednesday, 18 June 2014

பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பமா?

                                     தமிழ்த் திரைப்பாக்கூடம்
                                      திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு

2014 – 2015 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது..

பாடல் எழுதுவது என்பது பலரின் கனவு. அதற்கு ஒர் அரிய வாய்ப்பு இது. உலக அளவில் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் படைக்கக் கற்றுக்கொள்ளும் விருப்பம் உள்ள.. அடிப்படைத் தமிழறிவும் கவியறிவும் கொண்டவர்கள், சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com

வகுப்பு   -       சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்
குறைந்தபட்சக் கல்வித்தகுதி    -        பத்தாம் வகுப்பு

மேலும் தொடர்புக்கு :    

தமிழ்த் திரைப்பாக்கூடம்   -  9566196747 ,  8056161139

Tuesday, 27 May 2014

தமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி

வலைப்பதிவுலகில் முன்னணித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின் வலைப்பூக்களை இணைத்து உதவியமைக்கு மிக்க நன்றி.

கால இடைவேளை வழங்குவது தளங்களின் பேணுகை பற்றி அறிவதற்காக இருக்கலாம். இம்முறை நீண்ட இடைவேளை இருந்தமையால் பலருக்கு உள்ளத் தாக்கம் இருந்தமையை மறக்க இயலாது. தமிழ்மணம்.நெற் தன் பணியில் தவறு செய்யாது விரைவில் வலைப்பூக்களை இணைத்து பதிவர் உள்ளங்களை நிறைவு செய்யுமென பலர் தங்கள் வலைப்பூக்களில் தெரிவித்தமையை இக்கணம்  நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணம்.நெற் பக்கம் எத்தனை சிக்கல் இருந்திச்சோ நானறியேன். தமிழ்மணம்.நெற் நீண்ட இடைவேளையின் பின்னும் வலைப்பூக்களை இணைத்துத் தனது பணியை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழ்மணம்.நெற் இன் வெற்றிக்கு வலைப்பதிவர்கள் என்றும் ஒத்துழைப்பார்கள். தமிழ்மணம்.நெற் மேலும் சிறந்த திரட்டியாக வெற்றி நடைபோட வாழ்த்துகள்.

Wednesday, 16 April 2014

கணினி முரண்டு பிடித்ததால்...

இனிய சித்திரைப் புத்தாண்டு வருமுன்
என் கணினிக்கு நோய் (பழுது) வந்தாச்சு
விரும்பிகளுக்கு, நட்புகளுக்கு, உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக் கூட
வெளிப்படுத்த முடியாமல் போக
கணினி முரண்டு பிடித்தமையே
என் சாட்டு என்பேன்!
என் கணினி நலமாக
நானும்
உஙகளுடன் வலம் வருவேனென
இனிய சித்திரைப் புத்தாண்டில்
எல்லோரும் எல்லாமும் பெற்று
வெற்றியடைய வாழ்த்துகள்!