Showing posts with label யாழ்பாவாணனின் மின்நூல்கள். Show all posts
Showing posts with label யாழ்பாவாணனின் மின்நூல்கள். Show all posts

Friday, 26 September 2014

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)


வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து "எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்" என்ற தலைப்பில் மின்நூல் ஒன்றை வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://www.box.com/s/exn2yefonnvoltly671v

எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://online.fliphtml5.com/insb/ibao

எனது மின்நூலின் PDF பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.


எனது மின்நூலைப் படித்துச் சுவைத்தீர்களா? இது பற்றித் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Sunday, 3 November 2013

யாழ்பாவாணனின் மின்நூல்கள் பற்றி...

உங்கள் யாழ்பாவாணன் 1987 இலிருந்து எழுதுகோல் ஏந்தியவர். யாழ்பாவாணனின் முதல் பதிவின் தலைப்பு "திலீபனின் மூன்றாமாண்டு நினைவு"; முதலடி "உலகமே ஒருகணம் சிலிர்த்தது"; முதன்முதல் 25/09/1990 இல் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்தது. வீரகேசரி பத்திரிகை, அறிவுக்கதிர் சஞ்சிகை போன்றவற்றிலும் அரங்குகளிலும் யாழ்பாவாணனின் பதிவுகள் வெளியாகியது. ஈழப்போர் காரணமாக 20/05/2009 இற்கு முந்திய பதிவுகள் கையில் இல்லாவிடினும் 20/05/2009 இற்குப் பின் வலைப்பூக்களில் வெளியான பதிவுகளைத் தொகுத்து மின்நூல்களாக 2014 இலிலிருந்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிட இருக்கின்றது.