Thursday 27 August 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 01

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Saturday 1 August 2015

புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!


அன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;

ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.

என்னடா மோனே! அடி பிள்ளோய்!
உவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்
ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைக்கிறானாம்
ஈற்றில எல்லாவற்றையும் அழிச்சுப்போட்டு
கண்ணீர் வடிப்பான் போல கிடக்கே!
என்றாலும்
எங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது
யாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்!
மதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

எனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Thursday 9 July 2015

ஒரு வெளியீட்டிற்காக...

நகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன். விளைவு தொடர்ந்து படியுங்க.
படத்தின் உரிமம் : வேடந்தாங்கல் (http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html)

படத்தைப் பாருங்க...
இலங்கை என்றால் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை என நினைவூட்டுக.
இந்தியா-தமிழ்நாடு என்றால் சென்ன மெரீனாக் கடற்கரை என நினைவூட்டுக.

அடுத்துப் படத்திலுள்ள பேச்சைப் படியுங்க...
பெண் பிள்ளை உடனே கிளம்பணும் என்கிறாள்
ஆண் பிள்ளை அப்பா, அம்மா தேடுவாங்களா என்கிறான்
மீண்டும் பெண் பிள்ளை பள்ளிக்கூடத்தால மகனும் மகளும் வந்து தேடுவாங்களே என்கிறாள்

அடுத்துப் படத்திலுள்ள ஆள்களை அடையாளப் படுத்துங்க...
இளமை பேசும் இருவரில் எவரையும் அடையாளம் காணமுடியவில்லையா?

அப்ப உள்ளத்தில் எண்ணிப் பாருங்க...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்க: நான் வேலைக்குப் போனதும் என் பெண்டாட்டி இப்படித்தானோ...?

வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மார்: எந்த மாட்டையும் கன்றுகளையும் மேய்க்கப் போனாரோ...?

தெருச் செய்தி: கடற்கரையில் காதல் பண்ணும் இளசுகளை விட இளசுகள் போன்ற பெரிசுகளே அதிகமாம்...

படம் பார் பேச்சைப் படி
ஆளைப் பிடி என்று
கூகிளில் தேடிய படத்தை வைத்து
காதல் மாசடைகிறது
குடும்பம் உடைந்து போகிறது
இந்த நொடிப்பொழுதில்
நம்மாளுங்க இப்படித்தானுங்க என்று
ஒரு வெளியீட்டிற்காக...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்களும் 
வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மாரும் 
உள்ளத்தில் எண்ணியதையும் தந்து
தெருச் செய்தியாக நாட்டுநடப்பையும்
சொல்லி முடித்திருக்கிறேன்! - இனி
உங்கள் எண்ணங்களை வெளியிடுங்களேன்!


Tuesday 16 June 2015

அறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்

வாசிப்பவரை வாசகர் என்கிறோம். வாசகர் ஏன் வாசிக்க வருகிறார்கள்? அறிவு பசி போக்கவா? அறிவுத் தேடலுக்கு விருந்து கிடைக்குமென்றா? வாசிப்பதனால் உள/மன நிறைவு கிட்டுவதாலும் அல்லது வாசிப்பதனால் களிப்ப(மகிழ்ச்சிய)டைவதனாலும் வாசகர் வாசிப்பை விரும்புகின்றனர். வாசகர் உள்ளம் (மனம்) அறிந்து எழுதிய படைப்பாளிகளே வெற்றி பெற்றவராயினர்.

நாம் ஏன் எழுதுகிறோம்? எழுதுவதால் நாமும் களிப்ப(மகிழ்ச்சிய)டைகின்றோம். ஆயினும், எமது எழுத்து அதிக வாசகர் கண்ணில் பட்டு சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெறும் வேளை தான் உள்ளம் (மனம்) நிறைவடைகின்றது. சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெற வாசகர் களிப்ப(மகிழ்ச்சிய)டைய வேண்டுமென்பதை மறந்துவிடலாகாது. அதாவது, வாசகர் எதிர்பார்ப்பு எமது எழுத்தில் இருக்க வேண்டுமே!

வாசிப்பவரைப் படிக்காதவர் என எண்ணி எழுதுகோல் ஏந்திய சிலர் கண்டபடி கிறுக்கித் தள்ளி வாசகரிடம் சொல்லடி வேண்டிக்கட்டிய நிகழ்வுகளுக்குப் பல ஊடகங்கள் சாட்சி. எனவே, ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் போது எம்மை விட வாசகர் அதிகம் படித்திருப்பார் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு நிலையைக் கடுகளவேனும் எடுத்துச் சொல்ல இங்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இனி வாசகருக்கும் படைப்பாளிக்கும் உதவும் வகையில் "தமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்" என்ற தலைப்பில் "தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்"  என்ற துணைத் தலைப்பில் பேணப்படும் தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

இத்தளம் வாசகரின் அறிவுத் தேடலுக்கும் / அறிவு பசிக்கும் உதவும் என நம்புகின்றேன். அதேவேளை சிறந்த படைப்பாளிகள் தங்கள் தளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதில் எனது பணி என்னவென்றால், எனது பத்துப் பன்னிரண்டு தளங்களூடாக இத்தளத்தை அறிமுகம் செய்து வைப்பதாகும். எல்லோருக்கும் பயன்தரும் http://tamilsites.doomby.com/ என்ற தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

Tuesday 2 June 2015

ஊடகங்களில் தமிழைக் கையாளுவது எப்படி?

ஆங்கிலம் சேர்க்காத பதிவு என்றால்
வாசகர்/பதிவர் படிக்க மாட்டினம் என்ற
எண்ணம் சிலருக்கு இருக்கலாம்...
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
ஆங்கிலம் சேர்க்காத தலைப்பு இருப்பின்
வாசகர்/கேட்போர் உள்ளத்தில் எடுபடாது என்ற
எண்ணம் பலருக்கு இருக்கலாம்...
வரிவிலக்கைப் பெறுவதற்காய்
தமிழில் தலைப்பை இட்டாலும் கூட
தமிழ்த் திரைப்பட ஊடகத்தின் உள்ளே
பலமொழி கலந்த குழையல் மொழியே
வாசகர்/பார்ப்போர் உள்வாங்கும் நிலை!
ஊடகங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும்
தமிழைக் கொல்லும் ஊடகங்கள் தான்
எங்கள் கண்களில் முன்னே நிற்பதை
நான் காண்கின்றேன் - அதனால் தான்
"தமிழ் மின்னூடகங்களும்
அச்சு ஊடகங்களும்: இன்றைய
நிலையும் அறைகூவல்களும்" என்ற
பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்! - அதனை
ஆக்கிய அறிஞர் ரெ.கார்த்திகேசு, Ph.D. அவர்கள்
முன்னுரை தொட்டு முடிவுரை வரை
ஆழ, அகல, உயரம் பார்த்து
அக்கு வேறு ஆணி வேறாக
நன்றாக அலசி இருப்பதைப் பாரும்! - அதற்கு
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்!
http://reka.anjal.net/?p=96

Thursday 21 May 2015

அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்

" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்ற தலைப்பில்
"மகாவம்சத்தில் எங்குமே சிங்களத்தீவு என இலங்கை அழைக்கப்படவில்லை. வட இந்திய மன்னன்  அசோகனின் புத்த துறவிகளால் சிவனை வழிபட்ட சைவனாகிய நாக அரசன் தேவநம்பியதீசனுக்கு புத்தசமயம் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கையில் புத்தரும் இல்லை, பெளத்தர்களும் இல்லை, சிங்களவர்களும் இல்லை." என்றும்

"சிங்களவர்களின் ஜாதகக் கதைகளில் கூட தமிழர்கள் பற்றிய, தமிழர்களின் நாடு (தெமல ரட்ட) பற்றிய குறிப்புகள் உண்டு, ஆனால் சிங்கள என்ற இனம் பற்றியோ அல்லது மொழி பற்றியோ மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்பும், பின்பும் சில நூற்றாண்டுகள் வரை எந்த குறிப்பும் கிடையாது. சிங்கள, சிஹல, ஹேல என்ற எந்தச் சொல்லும் கிடையாது. ஆகவே வரலாற்றின் அடிப்படையில் இலங்கையை சிங்களத் தீவு என அழைப்பது தவறானதொன்றாகும்." என்றும்

முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட அறிஞர் வியாசன் முனைகின்றார்.
இணைப்பு: http://viyaasan.blogspot.com/2015/05/blog-post.html
 
"இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற தலைப்பில் "இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்." என முழு இலங்கையுமே தமிழருக்குச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட யாழ்பாவாணன் முனைகின்றார்.
இணைப்பு: http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_8469.html

மேற்படி, இரு பதிவுகளையும் படித்துப் பார்த்தால் "இலங்கை வரலாற்றில் தமிழர் அடையாளங்களே முதலில் இருந்ததாகவும் சிங்கள அடையாளங்கள் இருக்கவில்லை" என்று அறிஞர் வியாசன்  அவர்களும் "இந்தியாவில் நிகழ்ந்த ஆரியப் புரட்சியின் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர்." என்று யாழ்பாவாணனும் என்ன சொல்ல வருகின்றனர்?

" 'சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!" என்றாலும் "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்றால் இல்லை தமிழருக்குச் சொந்தமானது என்றாலும் இருவருமே முழு இலங்கையுமே தமிழருக்கச் சொந்தமானது எனக் கோடிட்டுக்காட்ட முன்நிற்கின்றனர். ஆயினும், யாழ்பாவாணனை விடச் சுவைமிகு கைவண்ணத்தில் நம்பக்கூடிய தக்க சான்றுகளை முன்வைத்து அறிஞர் வியாசன் அவர்கள் தன் கருத்தை உறுதிப்படுத்துவதைப் பார்த்தால் அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார் என்றே கருதமுடிகிறது.

முடிவு: முழு இலங்கையுமே சிங்களவருக்கல்ல தமிழருக்கே சொந்தமானது.

Wednesday 13 May 2015

இலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

என்ர கவிதையைத் திருடி அவளு போட்டிருந்தாள்.
என்ர படத்தைத் திருடி அவனு போட்டிருந்தான்.
இப்படிப் பல இலக்கியத் திருட்டுகள் தொடருகின்றன...
கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவையைப் பொறுக்கி இந்திய முன்னணி நாளேடு ஒன்றில் போட்டிருக்கிறாங்களாம். நாளேடுகளே இலக்கியத் திருட்டை மேற்கொண்டால் எழுதுறவங்க பாடு திண்டாட்டம் தான்.

எவங்க ஐயா? எவங்க அம்மா?
எப்பதான்... எப்படியுங்க...
திருவிளையாடல் திரைப்படத்தில மாற்றார் கவிதையை அனுப்பி ஆயிரம் பொற்காசு வென்றெடுத்த தருமியைப் பார்த்து கவிதைக்கான விளக்கத்தைச் சொல்லு என்ற கேட்ட வேளை தருமி பட்ட பாட்டைப் பார்த்தியளோ? அப்படித்தான் இலக்கியத் திருட்டில எழுதுறவங்க பாடு திண்டாட்டம் என்கிறேன்.

உவன் யாழ்பாவாணனும் உப்படிப் பல படைப்புகளைப் பொறுக்கி இலக்கியத் திருட்டுச் செய்கிறான். முறையாகத் தருமியைப் போல சிக்கவில்லைப் போலும்...அதனால அவர் மற்றைய வலைப்பூக்களுக்குள்ளே உள்நுளைந்து பொறுக்கி எழுதிய பதிவைத் தருகிறேன். உங்களால் முடிந்தால் யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

அப்பதிவின் தலைப்பு:
இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

அடுத்து அவரது பதிவைப் படியுங்க:

"இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம்:)" என்ற 
http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html
அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவிலிருந்து.

''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு 
ஷேக்ஸ்பியர் என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார்?'' என அறிஞர் பகவான்ஜி தன் நகைச்சுவையில போட்டிருந்ததை அறிஞர் வருண் படித்திருக்கிறார்.

"விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான்." என்று அறிஞர் வருண் தனது கருத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

அப்படியென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் இருட்டில ஆணா, பெண்ணா அழகானவங்க என்று எண்ணிப் (கற்பனை செய்து) பார்த்திருக்காங்க...

அவரவர் அழகை அடுத்தவர் கண்ணால பார்த்தாலும் அதனை உள்ளக் (மனக்) கண்ணால தான் எடை போடுறாங்க (இரசிக்கிறாங்க) என்பேன். ஆகையால், இருட்டிலும் சரி வெளிச்சத்திலும் சரி  எல்லோரும் அழகு தான்.  

இப்படி அவரது பதிவை முடித்துக் கொள்கிறார். இங்கே சின்னப்பொடியனாக யாழ்பாவாணன் இருந்துகொண்டு பகவான்ஜி, வருண் போன்றோரின் கருத்துகளை அதுவும் ஜோக்காளி தளத்தில இறங்கிச் சுழியோடிப் பொறுக்கித் தன்னுடைய பதிவை ஆக்கியிருக்கிறார். பகவான்ஜி, வருண் ஆகியோரது கருத்தில்லை என்றால் யாழ்பாவாணனின் பதிவுக்கு உயிர் இருக்காது. அப்படியாயின், யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

நானும் ஆளை மாட்டிவிட்டால், யாழ்பாவாணன் இனி மாற்றார் அறிவைப் பொறுக்கி தன் வலைப்பூக்களில் எழுதமாட்டார் என்று தான் எண்ணியிருந்தேன். "கருத்துச் சொந்தக்காரர் பெயர், கருத்து வெளியான தளமுகவரி, எந்தப் பதிவிலிருந்து பொறுக்கியது என எல்லாம் எழுதியிருப்பதால் இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள். அது தான் "யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைக்க முடியாதா?" என்று உங்களைக் கேட்கிறேன்.

எனது இனிய உறவுகளே!
எனது புதிய வலைப்பூவைப் படித்துப் பார்த்து மதியுரை தருவீர்களென நம்புகின்றேன்.
இணைப்பு: https://ial2.wordpress.com/

Saturday 9 May 2015

மின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்


பத்து மாதம் வயிற்றிலே
பிள்ளையைச் சுமந்து
பெற்றெடுத்தவளுக்குத் தான் தெரியும்
மகப்பேற்று வலி!
ஒரு பக்கம் தட்டச்சுச் செய்ய
நம்மாளுகள் படுகிற பாட்டை
தாங்களும்
அறியாமல் இருக்க முடியாதே!
முன், பின், நடு
மேல், கீழ், நடு
இடம், வலம், நடு
அமைப்புகளுக்கேற்ப நிறங்கள்...
நிற அமைப்புகளிற்கு உள்ளே
கனதியான படைப்புகள்...
சொல்ல வரும் செய்திக்கேற்ப
படைப்புகளின் தொகுப்பு...
இப்படியே அடுக்கித் தான்
மின் இதழ் என்ன
மின் நூல் என்ன
எந்தவொரு
மின் வெளியீடு என்ன
உருவாக்கி வெளியிட வேண்டியிருக்கே!
தடைகள் பல தாண்டி
எண்ணங்கள் பல கொட்டி
விடியும் வரை விழித்திருந்து
இதழோ நூலோ வெளிக்கொணர
படைப்பாளி பட்ட வலி
எவருக்குத் தான் தெரியுமிங்கே!
"நமது திண்ணை" என்றொரு மின் இதழை
( மின்னிதழைப் பதிவிறக்க இங்கே சொடுக்குக )
எப்படித் தான் வடிவமைத்திருப்பார்களோ?
பக்கங்களின் சுமையையும்
பக்க வடிவமைப்பு நுட்பங்களையும்
பதிவிறக்கிப் படித்தால் தான் தெரியுமே!
அதற்கு முன்னர்
அறிஞர் இராதாகிருஷ்ணன் ஆக்கிய
"நமது திண்ணை - சிற்றிதழ்
வடிவமைப்பு" பற்றிய விரித்துரைப்பை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!
வெளியீடுகள் என்பது
எழுத்துகளில் தான் இருப்பினும்
கண்ணுக்கு குளிர்மை தரும்
பின் புற நிறம்
எழுத்துகள் சொல்லும் செய்திக்கு ஏற்ப
பின் புறப் படம்
பின் புற அமைவிற்கு ஏற்ப
எழுத்துகளின் நிறம்
வெளியீடுகளின் அளவிற்கு ஏற்ப
பதிவுகளின் நீளம்
இன்னும் இன்னும்
எத்தனையோ இருக்கலாம்...
படித்துப் பார்த்தால் படித்துக் கொள்ளலாமே!
மின் இதழும் 
மின் இதழ் வடிவமைப்பும்
எப்படி இருக்க வேண்டுமென அறிந்தால்
நமது மின்நூல் கூட
எப்படி இருக்க வேண்டும் என்பதை
நான் சொல்லாமலே - நீங்களே
கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கே!

Friday 8 May 2015

மின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா?

ஒரு நூல் வெளியீட்டையும் ஒரு தாயின் மகப்பேற்றையும் ஒப்பிட்டு தாயின் மகப்பேற்று வலி போலத் தான் ஒருவரது நூல் வெளியீட்டு வலியும் இருக்குமென்பர். தாயானாவள் தன் குழந்தையைச் சுமந்து ஈன்றெடுக்கம் நாள் வரை பட்ட துயர் எழுத்தில் எழுதிவிட முடியாது. அது போலப் படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்ற எண்ணம் எழுதி,  தொடராக வெளியாகி. தொகுத்து நூலாக உருவாகி வெளியிடும் வரை படைப்பாளி பட்ட துயரும் அதை விட அதிமாகத் தானிருக்கும்.

நம்மாளுகள் சிலரின் தவறான எண்ணங்கள் பல படைப்பாளிகளின் உள்ளத்தை நோகடித்து இருக்கிறது.
உவர்களுக்கென்ன
எம்.எஸ்.வேர்ட்டில் தட்டிப்போட்டு
போட்டோசொப்பில் வெட்டிப்போட்டு
பிடிஎஃப் இல ஒட்டிப்போட்டு
வலையில காட்டிப்புட்டால்
மின்னூல் என்பாங்க!

இப்படி மின்னூல் ஆக்கியோரைச் சொல்லால் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு படைப்பாளி தனது மின்நூலை வெளிக்கொணர எவ்வளவு துன்ப, துயரங்களைச் சந்தித்திருப்பார். நான் கூட மின்னூல் ஒன்றை ஆக்கி வெளியிட்ட வேளை பட்ட துயரை உணர்ந்தே இவ்வாறு மின்னூல் வெளியிடுவோரை நோகடிக்க வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தனைக்கும் மத்தியில் எப்படியோ பல அறிஞர்கள் தங்கள் மின்னூல்களை வெளியிடுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில் அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மின்னூல் விரிப்பைப் பார்க்க முடிந்தது. அதிலும் தமிகத்தில் இருந்து "ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்" என்றொரு ஈழம் சார்ந்த கட்டுரைகளையும் மின்னூல் ஆக்கியுள்ளார். அவரது மின்னூல்களைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்.

ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்
"ஈழம் சார்ந்த கட்டுரைகள்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தமிழர் தேசம்
"நானும் எங்க ஊரும்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

வெள்ளை அடிமைகள்
"என் நாடு இந்தியா. நான் இந்தியன்" என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/white-slaves/

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்
"திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/factory-notes/

பயத்தோடு வாழப் பழகிக் கொள்
"நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம்." என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

படம் - அவரது நூலறிமுகத்தில்...

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
"நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன்." என்று  தொடருகிறார்.

படம் - அவரது நூலறிமுகத்தில்...

அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவற்றைவிட டொலர் நகரம் என்றொரு நூலையும் அறிஞர் வெளியிட்டுள்ளார். அறிஞரின் மின் நூல்களைப் பதிவிறக்கிப் படித்த பின், தங்கள் எண்ணங்களைப் பகிருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். 








Thursday 23 April 2015

நீங்கள் படைப்பாளிகளா?

படைப்பாளிகளே!
படைப்புகளை எப்படி ஆக்குவீர்?
அதற்கான
சூழ்நிலை எப்படி அமைந்துவிடுகிறது?
படைப்பாளி ஒருவரின்
படைப்பாக்க முயற்சிக்கு ஏற்ற
சூழ்நிலை தான் - அந்த
படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது!

கதையோ கவிதையோ வா வாவென்று
எழுதக் குந்தினால்
ஒழுங்காய் எழுத வராது
கதையோ கவிதையோ
உள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை
எழுதிப்பார்த்தீர்களா? - அவ்வேளை
எழுதிய படைப்பே - நீங்கள்
எதிர்பார்க்காத அளவுக்கு
சிறப்பாக அமைந்திருப்பதை உணருவீர்களே!

எழுதியதை வெளியீடு செய்வது என்பது
இலகுவான ஒன்றல்ல - அதுவும்
புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்
எத்தனை சிக்கல்கள்?
அத்தனைக்கும் முகம்கொடுத்து
வெளியிட்ட பின்னர் - அதனை
வாசகர் கையிற்குக் கொண்டுபோய்
சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!

இதெல்லாம்
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்தால்
புரிந்துகொள்ள முடியும் என்பேன்!
நீங்கள் படைப்பாளிகளா? - அப்ப
படைப்பாக்கம், வெளியீடு பற்றி
எண்ணிப் பார்த்ததுண்டா? - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html
அறிஞர் கரந்தை ஜெயக்குமாரின்
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்த பின்
என் கருத்தில்
தவறிருந்தால் சொல்லுங்களேன்!