Thursday 27 August 2015

புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 01

http://www.ypvnpubs.com/

எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.
தூய தமிழ் பேணும் பணி
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
உளநலப் பேணுகைப் பணி
யாழ்பாவாணனின் எழுத்துகள்
யாழ்பாவாணன் வெளியீட்டகம்
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
இவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்திலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.

http://www.ypvnpubs.com/

இப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.
இப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.
எனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.

http://www.ypvnpubs.com/

Saturday 1 August 2015

புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!


அன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது;

ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார் அறிவைப் பகிரப் பேணிய ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற ஒரே தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் விரைவில் வெளியிடவுள்ளேன். அதன் காரணமாக எனது எல்லா வலைப் பூக்களிலும் புதிய பதிவுகளை இடமுடியாதுள்ளது. வெகு விரைவில் புதிய தனி வலைப்பூவில் புதிய பதிவுகளுடன் சந்திக்கவுள்ளேன்.

என்னடா மோனே! அடி பிள்ளோய்!
உவன் சின்னப் பொடிப்பயல் யாழ்பாவாணன்
ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைக்கிறானாம்
ஈற்றில எல்லாவற்றையும் அழிச்சுப்போட்டு
கண்ணீர் வடிப்பான் போல கிடக்கே!
என்றாலும்
எங்கட தம்பி திண்டுக்கல் தனபாலனிட்டைச் சொல்லியாவது
யாழ்பாவாணனுக்கு அறிவுரை கூறித் திருத்துங்கோவேன்!
மதிப்புமிக்க பெரிய வலைப் படைப்பாளிகள் இப்படிக் கூறியோ தாமாகவோ முன்வந்து இதற்கான வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

எனக்குப் பேண இலகு என எண்ணியே நான் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (Yarlpavanan Publishers) என்ற பெயரில் தனி வலைப்பூவாக ypvnpubs.com என்ற முகவரியில் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் பேண முயன்றாலும் வாசகருக்கும் பயன்தரும் ஒன்றாகவே நான் நம்புகிறேன். எனவே, எனது இம்முயற்சிக்குத் தங்களது வலைப்பூத் தொழில்நுட்ப அறிவைப் பாவித்து வழங்கக்கூடிய வழிகாட்டலையும் மதியுரையையும் பின்னூட்டங்களில் வழங்கி உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்