Sunday 15 December 2013

பயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.


நம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க: https://mega.co.nz/#F!dVh3SIab!UiF3-DAnSBR9T3LWAGF0cg!hdp2UDoQ 

நம்மாளுகள் பிறமொழிப் பழக்கத்திலிருந்து விடுபட்டுத் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வசதியாக ஆங்கில மொழிமூல மின்நூல்களைப் பதிவிறக்க: https://www.box.com/s/ih2aup1erqt3dvs70a07 

உங்கள் யாழ்பாவாணன் ஆக்கிய பதிவுகள் பல இணையப்பக்கங்களில் வெளிவந்துள்ளன. அவர் தற்போது ஐந்து வலைப்பூக்களை நடாத்துகிறார். எதிர்காலத்தில் அவர் வெளியிடவுள்ள தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க: https://www.box.com/s/exn2yefonnvoltly671v 

உங்கள் யாழ்பாவாணனும் கணினி சார் துறை வல்லுநராகையால், அவரது தெரிவில் திரட்டப்பட்ட கணினி சார் ஆங்கில மொழிமூல மின்நூல்களைப் பதிவிறக்க: http://sdrv.ms/1cBgSnf 

உங்கள் யாழ்பாவாணனின் தேடலில் அகப்பட்ட பல்வகை மின்நூல்களைப் பதிவிறக்க: http://sdrv.ms/1cBgLbn 

உறவுகளே! பயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வந்தால் போதாது; உங்கள் நண்பர்களுக்கும் இதனைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Sunday 3 November 2013

யாழ்பாவாணனின் மின்நூல்கள் பற்றி...

உங்கள் யாழ்பாவாணன் 1987 இலிருந்து எழுதுகோல் ஏந்தியவர். யாழ்பாவாணனின் முதல் பதிவின் தலைப்பு "திலீபனின் மூன்றாமாண்டு நினைவு"; முதலடி "உலகமே ஒருகணம் சிலிர்த்தது"; முதன்முதல் 25/09/1990 இல் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்தது. வீரகேசரி பத்திரிகை, அறிவுக்கதிர் சஞ்சிகை போன்றவற்றிலும் அரங்குகளிலும் யாழ்பாவாணனின் பதிவுகள் வெளியாகியது. ஈழப்போர் காரணமாக 20/05/2009 இற்கு முந்திய பதிவுகள் கையில் இல்லாவிடினும் 20/05/2009 இற்குப் பின் வலைப்பூக்களில் வெளியான பதிவுகளைத் தொகுத்து மின்நூல்களாக 2014 இலிலிருந்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிட இருக்கின்றது.