Wednesday, 13 May 2015

இலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

என்ர கவிதையைத் திருடி அவளு போட்டிருந்தாள்.
என்ர படத்தைத் திருடி அவனு போட்டிருந்தான்.
இப்படிப் பல இலக்கியத் திருட்டுகள் தொடருகின்றன...
கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவையைப் பொறுக்கி இந்திய முன்னணி நாளேடு ஒன்றில் போட்டிருக்கிறாங்களாம். நாளேடுகளே இலக்கியத் திருட்டை மேற்கொண்டால் எழுதுறவங்க பாடு திண்டாட்டம் தான்.

எவங்க ஐயா? எவங்க அம்மா?
எப்பதான்... எப்படியுங்க...
திருவிளையாடல் திரைப்படத்தில மாற்றார் கவிதையை அனுப்பி ஆயிரம் பொற்காசு வென்றெடுத்த தருமியைப் பார்த்து கவிதைக்கான விளக்கத்தைச் சொல்லு என்ற கேட்ட வேளை தருமி பட்ட பாட்டைப் பார்த்தியளோ? அப்படித்தான் இலக்கியத் திருட்டில எழுதுறவங்க பாடு திண்டாட்டம் என்கிறேன்.

உவன் யாழ்பாவாணனும் உப்படிப் பல படைப்புகளைப் பொறுக்கி இலக்கியத் திருட்டுச் செய்கிறான். முறையாகத் தருமியைப் போல சிக்கவில்லைப் போலும்...அதனால அவர் மற்றைய வலைப்பூக்களுக்குள்ளே உள்நுளைந்து பொறுக்கி எழுதிய பதிவைத் தருகிறேன். உங்களால் முடிந்தால் யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

அப்பதிவின் தலைப்பு:
இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

அடுத்து அவரது பதிவைப் படியுங்க:

"இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம்:)" என்ற 
http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html
அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவிலிருந்து.

''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு 
ஷேக்ஸ்பியர் என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார்?'' என அறிஞர் பகவான்ஜி தன் நகைச்சுவையில போட்டிருந்ததை அறிஞர் வருண் படித்திருக்கிறார்.

"விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான்." என்று அறிஞர் வருண் தனது கருத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

அப்படியென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் இருட்டில ஆணா, பெண்ணா அழகானவங்க என்று எண்ணிப் (கற்பனை செய்து) பார்த்திருக்காங்க...

அவரவர் அழகை அடுத்தவர் கண்ணால பார்த்தாலும் அதனை உள்ளக் (மனக்) கண்ணால தான் எடை போடுறாங்க (இரசிக்கிறாங்க) என்பேன். ஆகையால், இருட்டிலும் சரி வெளிச்சத்திலும் சரி  எல்லோரும் அழகு தான்.  

இப்படி அவரது பதிவை முடித்துக் கொள்கிறார். இங்கே சின்னப்பொடியனாக யாழ்பாவாணன் இருந்துகொண்டு பகவான்ஜி, வருண் போன்றோரின் கருத்துகளை அதுவும் ஜோக்காளி தளத்தில இறங்கிச் சுழியோடிப் பொறுக்கித் தன்னுடைய பதிவை ஆக்கியிருக்கிறார். பகவான்ஜி, வருண் ஆகியோரது கருத்தில்லை என்றால் யாழ்பாவாணனின் பதிவுக்கு உயிர் இருக்காது. அப்படியாயின், யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

நானும் ஆளை மாட்டிவிட்டால், யாழ்பாவாணன் இனி மாற்றார் அறிவைப் பொறுக்கி தன் வலைப்பூக்களில் எழுதமாட்டார் என்று தான் எண்ணியிருந்தேன். "கருத்துச் சொந்தக்காரர் பெயர், கருத்து வெளியான தளமுகவரி, எந்தப் பதிவிலிருந்து பொறுக்கியது என எல்லாம் எழுதியிருப்பதால் இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள். அது தான் "யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைக்க முடியாதா?" என்று உங்களைக் கேட்கிறேன்.

எனது இனிய உறவுகளே!
எனது புதிய வலைப்பூவைப் படித்துப் பார்த்து மதியுரை தருவீர்களென நம்புகின்றேன்.
இணைப்பு: https://ial2.wordpress.com/

Saturday, 9 May 2015

மின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்


பத்து மாதம் வயிற்றிலே
பிள்ளையைச் சுமந்து
பெற்றெடுத்தவளுக்குத் தான் தெரியும்
மகப்பேற்று வலி!
ஒரு பக்கம் தட்டச்சுச் செய்ய
நம்மாளுகள் படுகிற பாட்டை
தாங்களும்
அறியாமல் இருக்க முடியாதே!
முன், பின், நடு
மேல், கீழ், நடு
இடம், வலம், நடு
அமைப்புகளுக்கேற்ப நிறங்கள்...
நிற அமைப்புகளிற்கு உள்ளே
கனதியான படைப்புகள்...
சொல்ல வரும் செய்திக்கேற்ப
படைப்புகளின் தொகுப்பு...
இப்படியே அடுக்கித் தான்
மின் இதழ் என்ன
மின் நூல் என்ன
எந்தவொரு
மின் வெளியீடு என்ன
உருவாக்கி வெளியிட வேண்டியிருக்கே!
தடைகள் பல தாண்டி
எண்ணங்கள் பல கொட்டி
விடியும் வரை விழித்திருந்து
இதழோ நூலோ வெளிக்கொணர
படைப்பாளி பட்ட வலி
எவருக்குத் தான் தெரியுமிங்கே!
"நமது திண்ணை" என்றொரு மின் இதழை
( மின்னிதழைப் பதிவிறக்க இங்கே சொடுக்குக )
எப்படித் தான் வடிவமைத்திருப்பார்களோ?
பக்கங்களின் சுமையையும்
பக்க வடிவமைப்பு நுட்பங்களையும்
பதிவிறக்கிப் படித்தால் தான் தெரியுமே!
அதற்கு முன்னர்
அறிஞர் இராதாகிருஷ்ணன் ஆக்கிய
"நமது திண்ணை - சிற்றிதழ்
வடிவமைப்பு" பற்றிய விரித்துரைப்பை
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!
வெளியீடுகள் என்பது
எழுத்துகளில் தான் இருப்பினும்
கண்ணுக்கு குளிர்மை தரும்
பின் புற நிறம்
எழுத்துகள் சொல்லும் செய்திக்கு ஏற்ப
பின் புறப் படம்
பின் புற அமைவிற்கு ஏற்ப
எழுத்துகளின் நிறம்
வெளியீடுகளின் அளவிற்கு ஏற்ப
பதிவுகளின் நீளம்
இன்னும் இன்னும்
எத்தனையோ இருக்கலாம்...
படித்துப் பார்த்தால் படித்துக் கொள்ளலாமே!
மின் இதழும் 
மின் இதழ் வடிவமைப்பும்
எப்படி இருக்க வேண்டுமென அறிந்தால்
நமது மின்நூல் கூட
எப்படி இருக்க வேண்டும் என்பதை
நான் சொல்லாமலே - நீங்களே
கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கே!

Friday, 8 May 2015

மின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா?

ஒரு நூல் வெளியீட்டையும் ஒரு தாயின் மகப்பேற்றையும் ஒப்பிட்டு தாயின் மகப்பேற்று வலி போலத் தான் ஒருவரது நூல் வெளியீட்டு வலியும் இருக்குமென்பர். தாயானாவள் தன் குழந்தையைச் சுமந்து ஈன்றெடுக்கம் நாள் வரை பட்ட துயர் எழுத்தில் எழுதிவிட முடியாது. அது போலப் படைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்ற எண்ணம் எழுதி,  தொடராக வெளியாகி. தொகுத்து நூலாக உருவாகி வெளியிடும் வரை படைப்பாளி பட்ட துயரும் அதை விட அதிமாகத் தானிருக்கும்.

நம்மாளுகள் சிலரின் தவறான எண்ணங்கள் பல படைப்பாளிகளின் உள்ளத்தை நோகடித்து இருக்கிறது.
உவர்களுக்கென்ன
எம்.எஸ்.வேர்ட்டில் தட்டிப்போட்டு
போட்டோசொப்பில் வெட்டிப்போட்டு
பிடிஎஃப் இல ஒட்டிப்போட்டு
வலையில காட்டிப்புட்டால்
மின்னூல் என்பாங்க!

இப்படி மின்னூல் ஆக்கியோரைச் சொல்லால் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு படைப்பாளி தனது மின்நூலை வெளிக்கொணர எவ்வளவு துன்ப, துயரங்களைச் சந்தித்திருப்பார். நான் கூட மின்னூல் ஒன்றை ஆக்கி வெளியிட்ட வேளை பட்ட துயரை உணர்ந்தே இவ்வாறு மின்னூல் வெளியிடுவோரை நோகடிக்க வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தனைக்கும் மத்தியில் எப்படியோ பல அறிஞர்கள் தங்கள் மின்னூல்களை வெளியிடுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அந்த வகையில் அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் மின்னூல் விரிப்பைப் பார்க்க முடிந்தது. அதிலும் தமிகத்தில் இருந்து "ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்" என்றொரு ஈழம் சார்ந்த கட்டுரைகளையும் மின்னூல் ஆக்கியுள்ளார். அவரது மின்னூல்களைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்.

ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்
"ஈழம் சார்ந்த கட்டுரைகள்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/

தமிழர் தேசம்
"நானும் எங்க ஊரும்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/

வெள்ளை அடிமைகள்
"என் நாடு இந்தியா. நான் இந்தியன்" என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/white-slaves/

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்
"திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர்" என்று தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/factory-notes/

பயத்தோடு வாழப் பழகிக் கொள்
"நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம்." என்று  தொடருகிறார்.
இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/live-with-fear/

படம் - அவரது நூலறிமுகத்தில்...

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
"நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன்." என்று  தொடருகிறார்.

படம் - அவரது நூலறிமுகத்தில்...

அறிஞர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவற்றைவிட டொலர் நகரம் என்றொரு நூலையும் அறிஞர் வெளியிட்டுள்ளார். அறிஞரின் மின் நூல்களைப் பதிவிறக்கிப் படித்த பின், தங்கள் எண்ணங்களைப் பகிருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். 








Thursday, 23 April 2015

நீங்கள் படைப்பாளிகளா?

படைப்பாளிகளே!
படைப்புகளை எப்படி ஆக்குவீர்?
அதற்கான
சூழ்நிலை எப்படி அமைந்துவிடுகிறது?
படைப்பாளி ஒருவரின்
படைப்பாக்க முயற்சிக்கு ஏற்ற
சூழ்நிலை தான் - அந்த
படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது!

கதையோ கவிதையோ வா வாவென்று
எழுதக் குந்தினால்
ஒழுங்காய் எழுத வராது
கதையோ கவிதையோ
உள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை
எழுதிப்பார்த்தீர்களா? - அவ்வேளை
எழுதிய படைப்பே - நீங்கள்
எதிர்பார்க்காத அளவுக்கு
சிறப்பாக அமைந்திருப்பதை உணருவீர்களே!

எழுதியதை வெளியீடு செய்வது என்பது
இலகுவான ஒன்றல்ல - அதுவும்
புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்
எத்தனை சிக்கல்கள்?
அத்தனைக்கும் முகம்கொடுத்து
வெளியிட்ட பின்னர் - அதனை
வாசகர் கையிற்குக் கொண்டுபோய்
சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!

இதெல்லாம்
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்தால்
புரிந்துகொள்ள முடியும் என்பேன்!
நீங்கள் படைப்பாளிகளா? - அப்ப
படைப்பாக்கம், வெளியீடு பற்றி
எண்ணிப் பார்த்ததுண்டா? - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html
அறிஞர் கரந்தை ஜெயக்குமாரின்
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்த பின்
என் கருத்தில்
தவறிருந்தால் சொல்லுங்களேன்!

Tuesday, 14 April 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Friday, 3 April 2015

மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்

என் இனிய பதிவுலக உறவுகளே!

எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.

அறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.

யாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.

இதோ அவரது மின்நூலைப் பதிவிறக்கத் தேவையான இணைப்பு
http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html

எனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.

Saturday, 28 March 2015

கற்பழிப்புச் செய்திகளும் ஊடகங்களும்


கற்பு + அழிப்பு = கற்பழிப்பு என்று யாவரும் அறிந்ததே! கற்பு என்பது அறம் அல்லது ஒழுக்கம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இதனடிப்படையில் ஊடகங்களும் தம்விருப்பிற்கு ஏற்றாற் போல கற்பழிப்புச் செய்திகளை வெளியிடுகின்றன.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல; ஆணுக்கும் உரியதே! ஊடகங்கள் இதனை மறந்து விடுவதாகப் பலரும் பேசுவதுண்டு. இயற்கையும் பெண்ணுக்குப் பாதிப்பைத் தருவதால் ஊடகங்களை எதிர்க்க எவருமில்லை என்ற பேச்சு உலாவுகின்றது. ஊர்திகள் மோதுண்டால் மோதிய ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகள்; பெண்ணைச் செய்தி ஆக்கும் ஊடகங்களையோ பெண்ணின் கற்பை அழிக்கும் ஆண்களையோ தீமூட்ட முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம்.

என் நிலை என்ன வென்றால் ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகளின் செயலைப் பெரிதாகப் பரப்பும் ஊடகங்கள்; பெண்ணின் கற்பை அழிக்கும் கற்பில்லாத ஆண்களைச் செய்தியாக்கவோ கற்பில்லாத ஆண்களின் செயலைப் பெரிதாகப் பரப்ப முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம். இந்நிலை தொடருவதால் தான் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அப்படியாயின், கற்பழிப்புச் செய்திகளை எழுதுவது எப்படி?

நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான். இந்நிகழ்வை இப்படியும் சிலர் எழுதலாம்.

அரைகுறை ஆடை அணிந்து சென்ற பெண்ணைக் கண்ட ஆண் அவளைக் கெடுத்துவிட்டான்.

நடுவழியே தனியே சென்ற பெண்ணை ஆண்கள் சிலர் கெடுத்துவிட்டனர்.

மது அருந்திய ஆணை நம்பி நடுவழியே சென்ற பெண், அவனாலே கெடுக்கப்பட்டாள்.

இவ்வாறு எழுதுவோர் பெண்ணின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தரவுகளையும் எழுதுவர். இப்படி எழுதுவதால் பெண்ணின் பக்கம் தான் முழுப்பிழை என்றாகிவிடுகிறது. இதனால் ஆண்கள் சுத்தமானவர்கள், பெண்களே தவறுக்குக் காரணம் என்றாகிவிடுகிறது.

இவற்றை இப்படி மாற்றி எழுதினால் எப்படி இருக்குமென்று பாருங்களேன்.

இளமை முற்றிய ஆணோ நடுவழியே அழகு முற்றிய பெண்ணைக் கண்டதும் கெடுத்துவிட்டான்.

ஆண்கள் சிலர் நடுவழியே தனியே சென்ற ஏதுமறியாப் (அப்பாவி) பெண்ணைக் கெடுத்து விலங்குகளாயினர்.

பக்கத்து வீட்டாளை நம்பிப் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய பெண் அவனாலேயே கெடுக்கப்பட்டாள். பக்கத்து வீட்டாளைக் காவற்றுறை வலைவீசித் தேடுகின்றனராம்.

இப்படி, எப்படி எழுதினாலும் கூட கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடிவதில்லையே!

எடுத்துக்காட்டாக நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்றதும் கல்லூர் மக்கள் கல்லெறிந்தே முள்ளூர் ஆணைக் கொல்ல முயன்றனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பள்ளிக்கூட ஆசிரியை மாணவன் ஒருவரை வீட்டிற்கு அழைத்துக் கற்றுக்கொடுப்பதாகக் கூறித் தன் பாலியல் பசிபோக்கப் பாவித்தவேளை கண்ணுற்ற அயலண்டை ஆள்கள் ஆசிரியையை மரத்தில் கட்டிவைத்து ஊரைக்கூட்டி நோகடித்தனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்கவல்ல அல்லது கற்பழிப்பு நிகழ்வுகள் தொடராமல் இருக்க உதவும் வகையில் ஊடகங்கள் கற்பழிப்புச் செய்திகளை வெளியிடலாமே!

இது பற்றிப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்பக்கக் கருத்துகளை எப்படி எழுதுவார். ஊடகவியல் அறிஞர் மு.வி.நந்தினி அவர்களின் "கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?" என்ற பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்.

http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

Sunday, 22 March 2015

நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!

என் நிறம், மணம், குணம் ஏதுமறியாது
எனது அடி, நுனி, அத்தனையும் அறியாது
2010 இலிருந்து
தமிழ்நண்பர்கள்.கொம் இலிருந்து
என்னுடைய எழுத்தில்
என்னை அடையாளம் கண்டு
என்னையும் ஒரு பதிவராகக் கணக்கிலெடுத்து
உறவைப் பேணி வரும்
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
எங்கிருந்தோ என் பதிவை நாடி - தங்கள்
எண்ணங்களைக் கருத்து வண்ணங்களாக
பின்னூட்டமிட்டும் - எனது
பதிவுகளைப் பகிர்ந்தும் - எனது
தளங்களை அறிமுகம் செய்தும்
சின்னப்பொடியன் (யாழ்பாவாணன்) என்னை
வலைப்பதிவராக (Blogger) உயர்த்திய
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
உங்கள் ஒத்துழைப்பும் வழிகாட்டலும்
என்னை வளப்படுத்தி, நெறிப்படுத்தி
எனது திறமைகள் எல்லாவற்றையும்
ஏழாம் எண் ஆளென - தமிழில்
ஏழு வலைத் தளங்களூடாக
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
வெளியிடப் பின்னூட்டியாக (Feedback) இருந்து
என்னை ஆளுமை செய்கிறது என்பதை
நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
ஆகிய வலைத் தளங்களின்
வடிவமைப்பை நிறைவு செய்யும் நோக்கில்
அடிக்கடி தங்கள் பதிவை நாடி
என் கருத்துகளை பின்னூட்டமிட முடியாமை
எனக்குத் துயரம் தான்...
ஆயினும் - தங்கள்
வலைப்பூக்களை - தங்கள்
பதிவுகளை நாடி வருவேன்!
நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!


Friday, 6 March 2015

தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க


எழுதுகோல் பிடிக்கத் தெரிந்தவர்கள்
பழுதின்றி எழுதத் தெரிந்தவர்கள்
எழுதியதை வாசிக்கத் தெரிந்தவர்கள்
வாசித்ததைப் புரிந்து கொண்டவர்கள்
எல்லோரும் தான்
தமிழ் மீது பற்றுள்ள எல்லோரும் தான்
எவ்வேளையும் மீட்டுப் பார்க்க வந்ததே
எங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின்
மாதாந்த மின் இதழ்!
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ்!
உலகம் தமிழ் படிக்க வழிகாட்டும்
தமிழ் நண்பர்கள் மின் இதழே வாழ்க!
தூங்கிக்கொண்டிருக்கும்
உலகத் தமிழினத்தைத் தட்டியெழுப்ப
வந்திருக்கும் மின் இதழுக்கு
படைப்பெழுதிய எல்லோருக்கும்
மின் இதழாக்கிய மேலாளர்களுக்கும்
தமிழை விரும்பும் ஒவ்வொருவருக்கும்
பயனளிக்கத் தொடர்ந்து வரும் மின் இதழை
வரவேற்பதோடு வாழ்த்துகிறேன்!
வாழ்க தமிழ் நண்பர்கள் தள மேலாளர்கள்!
வாழ்க தமிழ் நண்பர்கள் தளப் படைப்பாளர்கள்!
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாசகர்கள்!
வாழ்க தமிழை விரும்பும் ஒவ்வொருவரும்!
தமிழ் நண்பர்கள் மின் இதழைக் கண்ட மகிழ்வில்
என்னுள்ளத்தில் எழுந்த வரிகளை
தங்களுடன் பகிர்ந்தமைக்கு உதவிய
என் தமிழுக்கு நானடிமை!

தமிழ் நண்பர்கள் - மின் இதழ்கள்
https://mega.co.nz/#F!YcIBmAzB!YD0Ot8974jY2VdKQa0gTIw

மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி இதுவரை வெளிவந்த தமிழ் நண்பர்கள் - மின் இதழ்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Sunday, 1 March 2015

அ... ஆ... ஆள்களின் செய்தீகள்


"அ-மனிதர்கள்!" என்றதும்
"அ" இற்குப் பொருள் தேடியே
படிக்கின்ற வேளை...
"ஆ" என்று ஆட்டுவித்த - அந்தந்த
நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டிய
அருமையான பதிவை - நானும்
படித்தமையால் பகிர்கிறேன் - நீங்களும்
படிக்க மறந்துவிடாதீர்கள்...
.
1990 இல் பாவலர் முத்துநிலவன் எழுதிய
பாவொன்றே பதிவின் கருப்பொருள்

இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்
      எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்
      கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்
      கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
      மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!

கருப்பொருள் புரிந்தால்
ஒருகணம் எண்ணிப்பாருங்கள்
வரலாறு நம்மாளுகளை திருத்தும்
என்பது பொய்யாகி
நம்மாளுகள் வரலாற்றைத் திருத்தும்
இழிசெயலை எண்ணிப்பாருங்கள்
அதற்கு முன்
"அ-மனிதர்கள்!" பதிவைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்!
http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post_28.html

"வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!" என்று
"அ-மனிதர்கள்!" எவரையாவது கண்டால்
காதிற்கு எட்டும்படி சொல்லிவையுங்கள்!