Wednesday 13 May 2015

இலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

என்ர கவிதையைத் திருடி அவளு போட்டிருந்தாள்.
என்ர படத்தைத் திருடி அவனு போட்டிருந்தான்.
இப்படிப் பல இலக்கியத் திருட்டுகள் தொடருகின்றன...
கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவையைப் பொறுக்கி இந்திய முன்னணி நாளேடு ஒன்றில் போட்டிருக்கிறாங்களாம். நாளேடுகளே இலக்கியத் திருட்டை மேற்கொண்டால் எழுதுறவங்க பாடு திண்டாட்டம் தான்.

எவங்க ஐயா? எவங்க அம்மா?
எப்பதான்... எப்படியுங்க...
திருவிளையாடல் திரைப்படத்தில மாற்றார் கவிதையை அனுப்பி ஆயிரம் பொற்காசு வென்றெடுத்த தருமியைப் பார்த்து கவிதைக்கான விளக்கத்தைச் சொல்லு என்ற கேட்ட வேளை தருமி பட்ட பாட்டைப் பார்த்தியளோ? அப்படித்தான் இலக்கியத் திருட்டில எழுதுறவங்க பாடு திண்டாட்டம் என்கிறேன்.

உவன் யாழ்பாவாணனும் உப்படிப் பல படைப்புகளைப் பொறுக்கி இலக்கியத் திருட்டுச் செய்கிறான். முறையாகத் தருமியைப் போல சிக்கவில்லைப் போலும்...அதனால அவர் மற்றைய வலைப்பூக்களுக்குள்ளே உள்நுளைந்து பொறுக்கி எழுதிய பதிவைத் தருகிறேன். உங்களால் முடிந்தால் யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

அப்பதிவின் தலைப்பு:
இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

அடுத்து அவரது பதிவைப் படியுங்க:

"இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம்:)" என்ற 
http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html
அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவிலிருந்து.

''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு 
ஷேக்ஸ்பியர் என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார்?'' என அறிஞர் பகவான்ஜி தன் நகைச்சுவையில போட்டிருந்ததை அறிஞர் வருண் படித்திருக்கிறார்.

"விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான்." என்று அறிஞர் வருண் தனது கருத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

அப்படியென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் இருட்டில ஆணா, பெண்ணா அழகானவங்க என்று எண்ணிப் (கற்பனை செய்து) பார்த்திருக்காங்க...

அவரவர் அழகை அடுத்தவர் கண்ணால பார்த்தாலும் அதனை உள்ளக் (மனக்) கண்ணால தான் எடை போடுறாங்க (இரசிக்கிறாங்க) என்பேன். ஆகையால், இருட்டிலும் சரி வெளிச்சத்திலும் சரி  எல்லோரும் அழகு தான்.  

இப்படி அவரது பதிவை முடித்துக் கொள்கிறார். இங்கே சின்னப்பொடியனாக யாழ்பாவாணன் இருந்துகொண்டு பகவான்ஜி, வருண் போன்றோரின் கருத்துகளை அதுவும் ஜோக்காளி தளத்தில இறங்கிச் சுழியோடிப் பொறுக்கித் தன்னுடைய பதிவை ஆக்கியிருக்கிறார். பகவான்ஜி, வருண் ஆகியோரது கருத்தில்லை என்றால் யாழ்பாவாணனின் பதிவுக்கு உயிர் இருக்காது. அப்படியாயின், யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

நானும் ஆளை மாட்டிவிட்டால், யாழ்பாவாணன் இனி மாற்றார் அறிவைப் பொறுக்கி தன் வலைப்பூக்களில் எழுதமாட்டார் என்று தான் எண்ணியிருந்தேன். "கருத்துச் சொந்தக்காரர் பெயர், கருத்து வெளியான தளமுகவரி, எந்தப் பதிவிலிருந்து பொறுக்கியது என எல்லாம் எழுதியிருப்பதால் இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள். அது தான் "யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைக்க முடியாதா?" என்று உங்களைக் கேட்கிறேன்.

எனது இனிய உறவுகளே!
எனது புதிய வலைப்பூவைப் படித்துப் பார்த்து மதியுரை தருவீர்களென நம்புகின்றேன்.
இணைப்பு: https://ial2.wordpress.com/

14 comments:

  1. #இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள்.#
    நூறுக்கு நூறு சரி ,நானும் இதைத்தானே சொல்கிறேன் :)
    உங்களின் விரிவான பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ஓ இப்படியுமா?!! திருட்டுகள் சகஜமாகிவிட்டதோ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நல்ல ரசனையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அட கடவுளே தொடருதா..
    இலக்கியத் திருட்டு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. இது திருட்டல பொழிப்புரை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. திருடர்களில் நேர்மையான திருடர்கள்...நேர்மையில்லா திருடர்கள் இருப்பது மாதிரி.. நேர்மையான இலக்கிய திருடர்கள் என்றே சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. நேர்மையில்லா இலக்கிய திருடர்களை எல்லோரும் காட்டிக்கொடுத்துவிடுவார்களே!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.