Friday 16 May 2014

நீங்கள் வலைப்பூக்களில் எழுதுபவரா?

ஊடகங்களும் வெளியீடுகளும் பற்றித் தெரிந்திருப்பதோடு வாசகர் விருப்பு, வெறுப்புகளை அறிந்திருந்தால் எந்த ஊடகத்திலும் நீங்கள் எழுதி வெல்லலாம். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்ற சூழலில்
வலைப்பூக்கள் முக்கிய ஊடகமாகப் பேணப்படுகிறது. ஆயினும், தமிழைப் பேணி எழுதுவோரும் தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோரும் இருக்கிறார்கள். தமிழைத் தமிங்கிலமாக எழுதுவோர் தமிழில் எப்ப எழுதுவார்களோ, அப்ப தான் ஊடகங்களிலும் வெளியீடுகளிலும் தமிழைப் பார்க்கலாம். சரி, இனி வலைப்பூவில் எழுதுவோர் கற்கவேண்டிய பகுதியை பகிரலாம் என எண்ணுகிறேன்.

"தாம் எழுதுவதை தாமே பிரசுரம் செய்து கொள்ள முடிகிறது, உடனடியாக பல பேர் படிக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து கூட நமது எழுத்தைப் பற்றி எழுதுகிறார்கள்- இன்னும் எத்தனையோ காரணங்கள். நாமே ராஜா; நாமே மந்திரி." என்ற எண்ணத்துடன் வலைப்பதிவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது. இந்த உண்மையை நிஷப்தம் (http://www.nisaptham.com/)  தளத்தில் 'எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?' என்ற பதிவில் அறிஞர் வா.மணிகண்டன் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவரது பதிவில் "தொடர்ந்து எழுதுவதில் சில சங்கடங்களும் இருக்கின்றன. அந்தச் சங்கடங்களை கொஞ்சம் அடையாளம் கண்டுகொண்டால் போதும்." என வழிகாட்டுவதோடு "விமர்சனங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நிராகரிக்கவும் கூடாது. பொருட்படுத்தத் தக்க விமர்சனங்கள் என்றால் அதைப்பற்றி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு விட்டுவிடலாம். அது மண்டைக்குள் ஏதோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும் போது subconscious-ல் இருக்கும் அந்த விமர்சனம் நம்மை மீண்டும் அந்தத் தவறை செய்ய அனுமதிக்காது." எனத் திறனாய்வின் சிறப்பையும் பகிருகிறார்.

ஈற்றில் "வலைப்பதிவு ஒரு நல்ல ஊடகம். கவனம் பெறுவதற்கும், நம் எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்குமான களம். எடுத்துக் கொள்கிற விஷயத்தில் சுவாரசியத்தைச் சேர்க்கத் தெரிந்தால் போதும். இங்கு நம் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருக்கலாம். சுவாரசியத்தைச் சேர்ப்பது என்பது பெரிய சூத்திரமெல்லாம் இல்லை. எழுத எழுத பழக்கத்தில் வந்துவிடும்." என வலைப்பூப் பதிவர்களுக்கான ஊக்கமருந்து ஒன்றையும் அவிட்டுவிடுகிறார்.

மேற்படி அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் பதிவை உங்களுடன் பகிருவதால் நன்மை உண்டா? உலகெங்கும் தூய தமிழைப் பேண (http://yarlpavanan.wordpress.com/) சிறந்த வலைப்பூப் பதிவர்கள் தேவை என்பதால் அறிஞரது அறிவூட்டலைப் பகிருவதால் எனக்கு நிறைவு கிடைக்கிறது. வலைப்பூ ஊடகம் பற்றிய தெளிவோடு சிறந்த படைப்புகளை ஆக்க அறிஞரது அறிவூட்டல் உங்களுக்கும் உதவுமென நம்புகிறேன்.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அறிஞரது அறிவூட்டலைப் படியுங்கள்.

எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா?

4 comments:

  1. vaasiththen.
    mikka nanru.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. நல்ல பதிவு. இணையத்தில் நிறையதொழில்நுட்ப பதிவுகள் உள்ளன. அவற்றில் ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளில் அடங்கியுள்ளசிறப்பம்சங்களைப் பற்றி எளிய முறையில் கொடுக்கும் வலைத்தளம் இது.

    நோக்கியா போனின் சிறப்பம்சங்கள் சுட்டியைச் சொடுக்கி பயன்பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.